NEW

Wednesday 1 November 2017

மொபைல் நம்பரை மறைக்க ட்ரிக் !

ஒரு மொபைல் நம்பரிலிருந்து  நண்பர்களின் மொபைல்களுக்கு அல்லது மற்றவர்களின் அலைப்பேசிக்கு அழைக்கும்பொழுது அந்த மொபைல் நம்பர் நண்பர்களுக்குத் தெரியாமல் மறைப்பதற்கு இப்போது ட்ரிக் (Mobile Number Hiding Trick) உள்ளது. 


நண்பர்களிடம் விளையாட நீங்கள் இந்த ட்ரிகை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது நீங்கள் உங்கள் நண்பரின் மொபைல் போனுக்கு அழைக்கும்போது அவரின் மொபைல் போனில் உங்களுடைய மொபைல் நம்பர் தெரிவதற்குப் பதில் Private Number என்று மட்டும் வரும்.  உங்களுடைய மொபைல் நம்பர் அவருடைய செல்போனில் தெரியாது.

மொபைல் எண்ணை மறைத்து பேச...

உங்களுடை மொபைல் நம்பர் 9999999999 எனில் அதனுடன் *67 என்ற எண்ணையும் உங்கள் மொபைல் எண்ணுடன் சேர்த்து டயல் செய்யுங்கள்.

இது ஒரு யுனிவர்சல் கோட். அதனால் உங்களது மொபைல் எண்  *67 9865072896 என்று டயல் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது எண்களுக்கிடையே இடைவெளி விடாது  இருக்க வேண்டும். அவ்வாறு இடைவெளி விடாமல் சரியாக உள்ளிட்டு டயல் செய்யும்போது உங்களுடைய எண் ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்கள்.

இவ்வாறு செய்யும்பொழுது உங்களுடைய எண் நீங்கள் அழைக்கும் நபருக்கு டிஸ்பிளே (Display) ஆகாது.  மீண்டும் உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் எனில் *82 என்ற எண்ணைச் சேர்த்து டயல் செய்தால் போதுமானது. பிறகு உங்களுடைய மொபைல் நம்பர் (Android Mobile Number) மீண்டும் பழையபடி மற்றவர்களின் மொபைல்களில் டிஸ்பிளே ஆகும்.

இதே முறையை இப்படியும் செய்யலாம்.

நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நெட்வொர்க்கின் கஸ்டமர் கேர்க்கு (Customer Care) போன் செய்து லைன் பிளாக் பிளாக் (line) வசதியை நீங்கள் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என சொன்னால் போதுமானது. அவர்கள் அந்த வசதியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவார்கள். 

மீண்டும் இந்த வசதி உங்களுக்கு வேண்டாமென நினைத்தால் , மீண்டும் கஸ்டமர் கேருக்கு போன் செய்து அவர்களிடம் இந்த லைன் பிளாக் வசதி எனக்கு வேண்டாம் என நீங்கள் கூறி, அந்த வசதியை நீக்கிவிடலாம். 

முக்கிய குறிப்பு: 

இந்த வசதியின் மூலம் உங்களுடைய மொபைல் நம்பரானது மற்றவர்களின் மொபைல்களில் தோன்றால் பிரைவேட் நம்பர் (Private Number) என்று மட்டுமே தோன்றும்.. மற்றபடி நீங்கள் இந்த வசதியின் மூலம் பேசுவது யார்.. எந்த எண்ணிலிருந்து பேசுகிறார்கள்.. எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதையெல்லாம் மறைக்க முடியாது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில், தவறான வழிமுறைகளில் செல்ல நினைத்தால் நிச்சயம் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வீர்கள். 

பெரிய பெரிய நிறுவனம் அல்லது வியாபார நிமித்தமாக (Business Related Calls), உங்களுடைய எண் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். மற்றபடி பிளாக் மெயில் செய்வதோ, மிரட்டுவதோ... வேறு பல சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ செய்யலாம் என நீங்கள் நினைத்தால் நிச்சயம் ஜெயில் கம்பியை எண்ண வேண்டியதுதான்.

Update: இந்த வசதி பெரும்பாலான மொபைல் போன்களில் தற்பொழுது வேலை செய்வதில்லை. 

முடிவுக்கு வருகிறது mp3 வரலாறு..! காரணம் என்ன?

பாடல்களின் நேரத்தை வைத்து, தூரத்தைக் கணக்கிடும் தலைமுறை நாம்! அதே நேரத்தில், MP3 பாடல்களைக் கேட்ட கடைசித் தலைமுறையும் நாமாகத்தான் இருப்போம். இணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான காப்புரிமை நிறுத்தப்படுவது தான் அதற்குக் காரணம்.
ஜெர்மனியைச் சேர்ந்த Fraunhofer IIS என்ற ஆய்வு நிறுவனம் தான், MP3 ஆடியோ ஃபார்மெட்டை உருவாக்கி வளர்த்தெடுத்தது. 90-களில் அறிமுகமான இந்த ஆடியோ வடிவம், குறைந்த மெமரி திறன் கொண்டது என்பதால் இணைய உலகில் மிக விரைவில் பிரபலம் ஆனது. தற்போது MP3 ஃபார்மெட்டை விட அதிகத் தரம் கொண்ட ஆடியோ ஃபார்மெட்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், MP3 ஃபார்மெட் தொடர்பான சில மென்பொருள் காப்புரிமைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் புதிதாக உற்பத்தி செய்யப்படும் கருவிகளுக்கு, MP3 தொடர்பான காப்புரிமை வழங்கப்படாது. பயன்பாட்டில் இருக்கும் கருவிகளில் MP3 பயன்படுத்துவதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது.
எப்படி பிரபலம் ஆனது MP3?
ஒரிஜினல் ஆடியோ ஃபைலானது சின்னச்சின்ன விவரங்களையும் சேமித்து வைத்திருக்கும். உதாரணத்துக்கு, இயல்பான மனிதனால் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகளை மட்டுமே உணர முடியும். இதை கேட்கும் ஒலித்திறன் என்பார்கள். சிடி-க்களில் பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் ஆடியோ ஃபைல் ஃபார்மெட்டில், இந்த அதிர்வலைகளைத் தாண்டியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கும். அதாவது 44100 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகள் கொண்ட விவரங்களும் டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்பட்டிருக்கும். எனவேதான் அவை அதிக மெமரி கொண்டதாக இருந்தன. ஒரேயொரு ஆடியோ சிடியில் சில பாடல்கள் மட்டுமே சேமிக்க முடிந்தன. மேலும், அதிக மெமரி அளவைக் கொண்டிருந்ததால் எளிதாக அவற்றைப் பரிமாற முடியாமல் இருந்தது. இதை மாற்றியமைத்து, குறைந்த அளவு கொண்ட ஆடியோ ஃபைலாக மாற்றியதால், MP3 ஆடியோ வடிவம் இணைய உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.
MP3 ஃபார்மெட்டானது, தேவையற்ற விவரங்களை நீக்கியது. மனிதனின் கேட்கும் ஒலித்திறனின் விவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற தேவையற்ற விவரங்களை நீக்கிவிடும். எனவே, ஆடியோ ஃபைலானது கம்ப்ரெஸ் செய்யப்பட்டு, அதன் மெமரி மிகக்குறைவானதாக சேமிக்கப்படும். MP3 ஃபார்மெட்டைப் பொறுத்தவரை, பல நூறு மெகா பைட்கள் மெமரி திறன் கொண்ட ஒரிஜினல் பாடல் கூட, சில மெகா பைட்களில் மாற்றப்பட்டு சேமிக்கப்படும். உலகம் முழுவதும் MP3 இசை வடிவம் மிகவும் பிரபலமாக இது தான் காரணம். இணைய வளர்ச்சியில் MP3 பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தினாலும், ஒரிஜினல் ஆடியோவை விட கொஞ்சம் தரம் குறைவானதாகவே கருதப்படுகிறது. பிட் ரேட்களைப் பொறுத்து MP3 ஆடியோ வடிவத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது.
MP3 அறிமுகமானபோது, மியூசிக் ஆல்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதனை கடுமையாக எதிர்த்தன. காப்புரிமையை மீறி கிட்டத்தட்ட அனைத்துப் பாடல்களும் இணையத்தில் இலவசமாகப் புழங்கின. விலை கொடுத்து மியூசிக் ஆல்பங்களை வாங்கிய ரசிகர்கள், இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்ததை, ஆடியோ கேசட் விற்கும் நிறுவனங்கள் விரும்பவில்லை. 2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம், MP3 பாடல்களைக் கேட்கும் ஐ-பாட் கருவியை அறிமுகப்படுத்தியது. அப்போதும் ஆடியோ கேசட் விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு. ஐபோன் விற்பனை மூலமாக ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் நிலைத்து நிற்க ஐ-பாட் தான் விற்பனைதான் அஸ்திவாரம் அமைத்துத் தந்தது. 2003-ம் ஆண்டிலேயே MP3 வடிவத்தை விட கூடுதல் பலன்கள் கொண்ட ஏ.ஏ.சி (AAC) ஆடியோ வடிவத்தை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த ஆரம்பித்தது தனிக்கதை. அது மட்டுமில்லாமல், தற்போது ஐ-டியூன்ஸ் வழியாக இணையத்தில் பாடல்களை லீகலாக டவுன்லோடு செய்ய முடியும்.
தற்போது யூடியூப் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளில் MP3 வடிவத்தை விடவும் தரம் வாய்ந்த ஆடியோ வடிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அட்வான்ஸ்டு ஆடியோ கோடிங் (AAC) எனப்படும் ஆடியோ வடிவமானது, அதிக தரத்துடன் குறைந்த மெமரி கொண்டதாக உள்ளது. எனவே MP3 வடிவத்தை விட இவை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. MP3 ஆடியோ வடிவத்தை உருவாக்கிய Fraunhofer IIS ஆய்வு நிறுவனம் தான், இந்த ஆடியோ வடிவமைப்பையும் உருவாக்கி காப்புரிமை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற ஒற்றைத் தாரக மந்திரமானது, உலகில் உள்ள அத்தனை விஷயங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்று. மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதென்பது, எல்லாத் துறைகளிலும் நடக்கக்கூடிய இயல்பான விஷயம். எனவே MP3 ஆடியோ வடிவத்துக்கு அடுத்தபடியாக, தரமான ஆடியோ வடிவங்களுக்கு மாறுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

GST- வரி 70 தெரிந்து கொள்ளுங்கள்

GST- வரி 70  தெரிந்து கொள்ளுங்கள்

GST – ஜுலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வர இருப்பதால், அதன் தொடர்பான அனைத்து தகவல்களும், அனைவரும் தெரிந்து கொள்வதிலும், தெரிவிப்பதிலும் கடமைப்பட்டு உள்ளோம்.
1. Second sales என்பது இல்லை. ஒவ்வொரூ விற்பனையிலும் வரி உண்டு.
2. Online மூலம் மட்டுமே ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
3. உள் மாநிலத்தில் செய்யும் வியாபாரத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வியாபாரம் வேறு மாநிலத்திற்கு செய்தால் வரி விலக்கு இருந்தாலும் கண்டிப்பாக பதிவு செய்து கொண்டு உரிய வரி செலுத்த வேண்டும். ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். 10,15,20 ஆகிய தேதிகளில் மாதம் 3 தடவை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக செலுத்தும் ஒவ்வொரூ நாளுக்கும் 100 ரூபாய் அபராதம். அதிகபட்சமாக ரூ 5000.
4. Aggregated turnover என்பது taxable goods +exempted good +Zero rated goods+Export goods ஆகியவற்றின் கூட்டு தொகையாகும்.மேலும் ஒரே PAN number ல் இரண்டு வேறு வேறு வியாபாரங்கள் செய்தால் அவற்றின் கூ ட்டு தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
5. Tin number பெற்றவர்கள் VAT department கொடுக்கும் temporary id &password மூலம் GST portal ல் பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 30 நாட்களுக்கு உள்ளாக அல்லது முதல் பில் போடுவதற்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம். 10 ந்தேதிக்குள் பதிவு செய்து கொண்டால் அந்த மாதத்திற்குண்டா ITC claim செய்ய முடியும்.
6. வரி விகிதங்கள் 3 தலைப்புகளாக பிரிக்கப்பட்டு ள்ளது.
– 1)CGST – Central goods and service tax.
– 2)SGST -State goods and service tax.
– 3)IGST – Integrated goods and service tax.
இதில் IGST என்பது வேறு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போது Invoice ல் குறிப்பிடவேண்டும். IGST தலைப்பில் வரி செலுத்த வேண்டும். IGST =CGST +SGST.
IGST என்பது IT based centrally managed automated mechanism to monitor the “Inter state sales and supply of goods and services.
7. வரி விதிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் வியாபாரிகள் உரிய நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருந்தால் மற்றொருவரும் பாதிக்கபடுவர். Input tax credit எடுக்க முடியாது. அந்த மாதத்தில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.அல்லது அபராதம் செலுத்த நேரிடும்.
8. Invoice ல் விலை குறிப்பிடும் போது வரி உள்ளடக்கியது என குறிப்பிடமுடியாது. வரி தணியே காண்பிக்க வேண்டும்.அப்போதுதான் அவரிடம் வாங்குபவர் ITC தன்னுடைய ரிட்டர்ன் ல் காண்பிக்க முடியும். Packing charges, freight ஆகியவற்றை வரி கணக்கிடும்போது சேர்க்க தேவையில்லை. விற்பனை தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.
9.Invoiceகள் 3 copy இருக்க வேண்டும். நிதி ஆண்டின் துவக்கத்தில் இருந்து முடியும் வரை தொடர் எண்கள் இருக்கவேண்டும். முறையே buyer, transporter, seller ஆகியோருக்கு 3 காப்பிகள்.உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்று reference number வாங்கி supplementary invoice போட்டு transport மூலம் சரக்குகள் அனுப்பலாம். Supplementary invoice ல் orginal invoice number குறிப்பிடவேண்டும். Original invoice ல் reference number குறிப்பிடவேண்டும்.
10. Capital goods க்கும் ITC எடுக்கலாம். ஆனால்அவை Income tax return ல் depreciation claim செய்யாமல் இருக்க வேண்டும். இது குறித்து ஆடிட்டரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கலாம்
11. வணிகர்கள் composite scheme மூலம் குறைந்த அளவு வரி செலுத்த முடியும். 50 லட்சம் ரூபாய் வரை “aggregated turnover” உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்பவர்கள் தகுதியானவர்கள். ஆனால் ITC எடுக்க முடியாது. சட்டம் அமலுக்கு வந்த30 நாட்களுக்கு உள்ளாக உரிய அனுமதி பெற்று செய்யலாம். வாங்கி விற்பவர்கள் மட்டும் தகுதியானவர்கள். உற்பத்தியாளர்களுக்கு அனுமதி இல்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரிட்டர்ன் தாக்கல் செய்தால் போதுமானது. ஆனால் composite scheme மூலம் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் இருந்து வாங்கி வியாபாரம் செய்யும் அடுத்த வணிகர் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். முடிந்தவரை composite வணிகர்களிடம் consumer-ஐ தவிர மற்றவர்கள் வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.
12. Casual trader என்பவர் ஒரே இடத்தில் நிலையாக வியாபாரம் செய்யாமல் வேறு வேறு இடத்தில் இருந்து வியாபாரம் செய்பவர் ஆகும். உதாரணமாக பண்டிகை காலங்களில் மட்டுமே கல்யாண மண்டபம் மற்றும் வேறு இடங்களில் வியாபாரம் செய்பவர் ஆகும். அவர்கள் வியாபாரம் செய்யும் பொருட்களுக்கு வரி விதிப்பு இருந்தால் turnover limit ஏதுமின்றி எல்லா விற்பனைக்கும் வரி செலுத்த வேண்டும். 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடையாது.
13. Gst சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நமக்கு மூலப் பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் composition scheme மூலம் வியாபாரம் செய்கிறாரா அல்லது ITC எடுத்து வியாபாரம் செய்கிறார்களா என 100 சதவீதம் உறுதி செய்து கொள்ளவேண்டும் Consumer- ஐ தவிர மற்றவர்கள் composition scheme மூலம் செய்யும் வியாபாரிகளை தவிர்ப்பது நல்லது. நாம் அதிக அளவில் வரி செலுத்த நேரிடும். நமது வியாபாரம் மற்றவர்களைவிட குறைவாகவே நடக்கும்.
14. வரி விதித்துள்ள பொருட்களை ஒரு வியாபாரி தனது பில்லில் வரி குறிப்பிடாமல் கொடுத்தால் அவர் Composition scheme மூலம் வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அல்லது 20 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
15. GST ரிஜிஸ்டர் செய்து கொள்ள பதிவு கட்டணம் ஏதும் இல்லை. 20 லட்சம் ரூபாய் வரை job work செய்பவர்கள் பதிவு செய்து கொள்ள தேவை இல்லை.
16. Job work கொடுக்கும் உற்பத்தியாளர்கள் உரிய முறையில், உரிய படிவத்தில் கொடுக்கவேண்டும்.180 நாட்களில் திரும்பி வராவிட்டால் அதை விற்பனை என கருதி அபராதம் விதிக்கப்படும்.
17. Inter state self supplies such as stock transfer will be taxable as a taxable person has to take state wise registeration.
B2C means supplies to unregistered person. (i. e.)business to consumers.
B2B means supplies to registered person. (i. e.)business to business men.
18. அரசுஅறிவிக்கும் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள தவறியவர்கள் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் தங்களது stock பொருட்களுக்கு Input credit கோர முடியாது. ஒரு வணிகர் ஒரு பில்லில் உள்ள ITC யை பில் தேதிகளில் இருந்து ஒரு வருடத்திற்குள் உபயோகித்து கொள்ள வேண்டும். ஒரு Invoice ல் bill amount ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் இருந்தால் 1%TDS பிடித்து அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
19. வரி செலுத்தும் போது கீழ் கண்ட GST account code எழுத வேண்டும்.
CGST -Tax 00010001,
IGST -Tax-0002 0001
SGST -Tax00030001
Interest, fees, penalty, additional tax ஆகியவற்றிற்கு தனி தனி account codeகள்உள்ளன.
20. வரியுள்ள பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் உள் மாநிலத்தில் அதற்கு வரி செலுத்த வேண்டும் அன்றிலிருந்து மாதாமாதம் படிவம் தாக்கல் செய்ய வேண்டும் வெளி மாநில வியாபாரங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு என்பது கிடையாது.
21.Every registered taxable person whose aggregated turnover during a financial year exceeds one crore rupees shall get his account audited and he shall furnish a copy of audited annual accounts and a reconciliation statement duly certified in FORM GSTR-9B,electronically through a common portal.
22. ஒரு பில்லில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் வரியுள்ள பொருட்களை
unregistered person க்கு விற்றால் அவருடைய முழு முகவரி மற்றும் டெலிவரி செய்யும் இடம், மாநிலம், மாநில எண் ஆகியவற்றை பில்லில் குறிப்பிட வேண்டும்.
23. வெளி மாநில வியாபாரங்களுக்கு பில் போடும்போது வரியை IGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.உள்மாநில விற்பனை செய்யும் போது வரியை SGST, CGST என்ற இடத்தில் குறிப்பிடவேண்டும்.
24.GST வரி செலுத்துபவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு transport வாடகை கொடுக்கும் போது transporter கொடுக்கும் invoice ல் உள்ள tax யை ITC-யாக எடுத்துக்கொள்ளலாம்.
25. வருடாந்திர ரிட்டர்ன் அடுத்து நிதியாண்டு 31 டிசம்பருக்குள் தாக்கல் செய்ய வேண்டும். Compsition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை Form GSTR-4,GSTR -4 A ஆகிய 2 படிவங்களும் GSTR-9A என ஒரு வருடாந்திர படிவமும்
தாக்கல் செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில purchase &sales செய்யக்கூடாது.
26. ஒரு வியாபாரி வேறு மாநில Consumer அல்லது unregistered person க்கு விற்றால், அதன் மதிப்பு ரூ 2,50,000 க்கு மேல் இருந்தால்அந்த invoice details GSTR-1 ரிட்டர்னுடன் upload செய்ய வேண்டும். ரூ 2,50,000 க்கு குறைவாக இருந்தால் மாநில வாரியாக மொத்த விற்பனை மதிப்பு மட்டும் தெரிவித்தால் போதுமானது.
27. ஒரு மாதத்தில் ஒரு சலான் மூலம் ரூ. 10,000 வரையே cash,cheque, அல்லது DD மூலம் வரி செலுத்த முடியும். அதற்கு மேல் எதுவும் செலுத்த வேண்டி இருந்ததால் Internet banking, credit card, debit card, RTGS மற்றும் NEFT மூலம் செலுத்த வேண்டும். NEFT அல்லது RTGS மூலம் செலுத்துவதாக இருந்தால் சலானுடன் இணைந்து வரும் form உடன் பேங்கி ல் கொடுக்க வேண்டும்.
விற்பனையை அதிகரிக்க கொடுக்கும் இலவச பொருட்களுக்கு ம் வரி செலுத்த வேண்டும்.
28. GST slab rates are 5%,12%,18%,28%.
29. Job work “service ” என்ற தலைப்பில் வரும். Job work செய்த இடத்தில் இருந்து நம் பார்ட்டிகளுக்கு பொருட்கள் அனுப்புவதாக இருந்தால் அவர் Unregistered job worker ஆக இருந்தால் அவருடைய முழு முகவரிநம் ரிஜிஸ்டரேசன் சர்டிபிகேட்டில் இடம் பெற வேண்டும்.
30. ஒரு unregistered jobworker – யிடம் jobwork கொடுக்கும் போது ஏற்படும் வேஸ்ட்களை அவர் விற்றால், அதற்கான வரியை நாம் செலுத்த வேண்டும்.
31. நாம் அனுப்பிய சரக்குகளை ஏதாவது ஒரு காரணத்துக்காக நம் பார்ட்டி திருப்பி அனுப்பினோலோ அல்லது விலை வித்தியாசம் கேட்டாலோ அல்லது அவராகவே குறிப்பிட்ட தொகையை ஒரு பில்லில் பிடித்துக்கொன்டு மீதி அனுப்பினாலோ நாம் அவருக்கு GST சட்டத்தின்படி credit note அனுப்ப வேண்டும். அதை அந்த மாத ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். நம் பார்ட்டியும் அவருடைய ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும்.
32.Registered taxable person அட்வான்ஸ் வாங்கினால் அதை பற்றிய தகவல்களுடன் receipt voucher கொடுக்க வேண்டும்.
33. வரியானது பைசா கணக்கில் வந்தால் nearest rupee கணக்குப்படி round off செய்து கொள்ளலாம்.
34. நாம் வாங்கிய Raw Material (taxable goods )நமக்கு வேண்டாம் என்று வாங்கியவர்களிடம் திருப்பி கொடுப்பதாக இருந்தால் 6 மாதத்திற்குள் திருப்பி கொடுத்து விட வேண்டும். ITC reverse செய்ய வேண்டும்.
35. PAN number இல்லாமல் ஒரு வியாபாரி வேறு மாநில வியாபாரிக்கு பொருட்கள் அனுப்ப முடியாது
36. ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை turnover செய்பவர்கள் Invoice ல் HSN code குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஐந்து கோடி வரை turnover செய்பவர்கள் முதல் 2 degit HSN code குறிப்பிட வேண்டும்.
37. வண்டிகளில் பொருட்களை கொண்டு செல்லும் போது, வண்டியில் உள்ள பொருட்களின் மொத்த மதிப்பு ரூ ஐம்பதாயிரத்தை தாண்டினால் வண்டியில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் உரிய ஆவணங்களை கேட்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு.
38. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரியுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வரியற்ற பொருட்களை விற்பனை செய்ய கூடாது.
39. 50 லட்சம் ரூபாய் வரை turnover உள் மாநிலத்தில் மட்டும் வியாபாரம் செய்யும் உற்பத்தியாளர்கள் Composition scheme மூலம் வியாபாரம் செய்ய தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
40.GST கவுன்சிலால் குறிப்பிடப்படும் பொருட்களை தயார் செய்யும் manufacturer மட்டுமே Composition scheme மூலம் வியாபாரம் செய்ய முடியும்.
41. அரசு சில சமயம் சில பொருட்களுக்கு “reverse charge “முறையில் வரி விதிக்கும். அப்போது வாங்குபவர்கள் தான் வரி செலுத்த வேண்டும்.
42. Aggregated turnover கணக்கிடும்போது value of supply கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது ஒரு பில்லில் உள்ள மொத்த மதிப்பு ஆகு‌ம். Commission,freight, packing charges சேர்த்து கணக்கிடபடும்.discount சேராது.
43. GST நம்பர் எடுத்திருந்தால், வரி விலக்கு பொருட்களை விற்பனை செய்தாலும் கண்டிப்பாக nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
44. GST நம்பர் எடுத்திருந்தாலே ஒவ்வொரு மாதமும் 3 முறை ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். வியாபாரம் இல்லை என்றாலும் nil ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும்.
45. Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால், பொருளின் மதிப்பு ரூ 100 க்கு மேல் இருந்தால் அவர் Tax invoice க்கு பதிலாக வேறு பில் கொடுக்கலாம்.Section 28 .3 (b).
46. பில்லில் வரியை தவறுதலாக குறிப்பிட்டுவிட்டால் அதை சரி செய்ய Credit note /debit note கொடுத்து சரி செய்ய வேண்டும்.
47. GST நம்பர் எடுத்தவர்கள் தான் விற்கும் பொருட்களுக்கு முன்பணம் வாங்கியிருந்தால் receipt voucher கொடுக்க வேண்டும். அதை ரிட்டர்னில் தெரிவிக்க வேண்டும். Section 33.
48. நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் ஏதாவது தவறு அல்லது விடுபட்டிருந்தாலோ, அதை சரி செய்யும் நாள் வரை உண்டான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டும்.
49. முதன் முதலாக நாம் தெரிவிக்கும் ரிட்டர்னில் உள்ள input credit amount (நம்மிடம் உள்ள stock பொருட்களுக்கு )provisional ஆக எடுத்துச் கொள்ளப்படும். வித்தியாசம் இருந்தால் உரிய நடைமுறை பின்பற்றப்படும். Section 36
50. GST சட்டத்தின்படி கணக்கு புத்தகங்களை, மற்ற ஆவணங்களை வருடாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்த பிறகு வரும் 60 மாதங்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
51. ரூபாய் ஒன்றறை கோடி வரை டர்ன்ஓவர் செய்யும் வியாபாரிகளில் 90 சதவீதம் மாநில அரசும் மீதி 10 சதவீதத்தை மத்திய அரசும் கண்காணிக்கும்.
52. 15 நாள் நோட்டிஸ் கொடுத்து நமது இடத்தில் ஆவணங்களை, பொருட்களை பார்த்து ஆடிட் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. Section 63
53 GST வரி வசூலித்த பிறகு, அந்த வரியை அரசுக்கு செலுத்தாமல் இருந்தால், பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, வியாபாரியின் சொத்தின்மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.
54. ஒரு வியாபாரியிடம் கணக்கிற்கு மேல் பொருட்கள் இருந்தால் அதை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
55. GST சட்டத்தின்படி மற்ற அரசு அதிகாரிகளும் GST அதிகாரிகளுக்கு உதவ அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
56. GST சட்டத்தை மீறுபவர்கள் மீது அதிக பட்சம் 25000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். Section 85
57. சிறிய தவறுகளுக்கும், ரிட்டர்னில் தவறுதலாக என்ட்ரி செய்திருந்தாலும் அபராதம் விதிக்க தடை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ 5000 வரை தவறு இருந்தால் திருத்திக்கொள்ள அபராதம் இல்லாமல் அனுமதிக்கப்படுகிறது. Section 86
58. GST சட்டத்தின்படி முறையான ஆவணங்கள் இல்லாமல் பொருட்களை கொண்டு செல்லும் போது வழியில் அதிகாரிகள் சோதனை செய்தால் உரிமையாளர் தானே முன்வந்து வரி மற்றும் 100 சதவீதம் அபராதம் செலுத்தினால் வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் வரியும், பொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் செலுத்திய பிறகு வண்டியும், பொருட்களும் விடுவிக்கப்படும். Section 89
59. Parnership வியாபாரங்களில் இருந்து ஏதாவது ஒரு பார்ட்னர் விலகுவதாக இருந்தால் 30 நாட்களுக்குள் கடிதம் மூலம் கமிஷனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
60. Cenvat படி itc எடுக்க விரும்பினால் சட்டம் அமலுக்கு வந்த 90 நாட்களுக்கு முன்பு இருந்த பில்லில் உள்ள ITC யை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும் .Section 167.
61. ஆர்டர், சம்மன் போன்றவற்றை வியாபாரியின்e-mail முகவரிக்கு அனுப்பினாலே அது பதிவு தபாலில் அனுப்பியதற்கு சமம் என்று Section 159 ல் கூறப்பட்டுள்ளது.
62. புட்டா கட்டிங் செய்வது, துணிகளுக்கு பிராசசிங் ,கேலண்டரிங்,பிரிண்டிங் செய்வது service என்ற தலைப்பில் வரும். Schudule-2
63. “Mutatis mutandis” means “the necessary changes having been made “.
Composition scheme மூலம் வியாபாரம் செய்பவர்கள் வெளி மாநில purchase செய்யலாம், வெளி மாநில sales செய்யக்கூடாது.
64. நாம் 30 ம் தேதி பொருட்களை அனுப்பி அது அடுத்த மாதம் 16ம் தேதி நமது பார்ட்டிக்கு கிடைத்தால் GST சட்டத்தின்படி 30ம்தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்த மாதம் நாம் அதற்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் 10 ம் தேதிக்குள் நமது பில் பார்ட்டிக்கு கிடைத்தால் மட்டுமே அவர் ITC எடுக்க முடியும். நமது பில்லும் ஏற்றுக் கொள்ளப்படும். இல்லாவிட்டால் mismatch என இருவருக்கும் notice வரும்.
65. வரி விகிதத்தில் மாற்றம் ஏற்படும் போது “time of supply “என்பது invoice தேதி அல்லது பணம் வந்த தேதி இதில் எந்த செயல் முதலில் நடந்ததோ அது ஏற்றுக் கொள்ளப்படும்.
66. நாம் நமது பார்ட்டிகளுக்கு தாமதமாக payment செய்து அதற்கு வட்டி, அபராதம் போன்றவற்றை செலுத்தி இருந்தால் அவையும் “Aggregated turnover “கணக்கிடும்போது சேர்த்துக் கொள்வர்.
67.Partnership firm ல் partner change நடந்தால் அதை தெரியப்படுத்தி புதிய registration செய்து கொள்ள வேண்டும்.
68.Original registration certificate கிடைத்த பிறகு, அந்த நாள் வரை ஏற்கனவே கொடுத்த invoiceகளுக்கு பதிலாக வேறு revised invoice பார்டிகளுக்கு கொடுக்கவேண்டும். Section 28
69. நாம் பில்லில் தெரிவிக்கும் விலையின் மதிப்பு குறைவாக இருப்பதாக கமிஷனர் கருதினால் நமது கணக்கு புத்தகங்களை வேறு சார்ட்டர்ட் அக்கவுண்ட்டிடம் கொடுத்து தணிக்கை செய்ய கமிஷனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான செலவை நாம் கொடுக்க வேண்டும். Section 68
70. Rawmaterial suppliers, manufacturers,(நாம் ),buyers ஆகிய மூவரும் சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான படிவங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒவ்வொரு வரும் ITC CLAIM செய்ய முடியும்.

பாஸ்வேர்டு வைக்கும் போது இதெல்லாம் செய்யாதீங்க...

பாஸ்வேர்டு.. மொபைல், கணினி, மின்னஞ்சல், ஷாப்பிங் என நமது ஆல் இன் ஆல் டிஜிட்டல் உலகத்தின் காவலன். நமது இணையதள கணக்குகளை பாதுகாப்பதில் முக்கியப்பங்கு வகிப்பவை இவைதான். ஆனாலும் நாம் பாஸ்வேர்டுகள் வைக்கும்போது, கவனக்குறைவாக சில தவறுகளை செய்து விடுகிறோம். சில விஷயங்களை மட்டும் கவனத்தில் வைத்திருந்தாலே போதும். பாஸ்வேர்டுகளை பாதுகாப்பாக உருவாக்கலாம்.

1. எளிதான பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்!

மிகவும் சிறிய அல்லது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது போன்ற கடவுச்சொற்கள் உங்களுக்கு எப்படி கையாள எளிதாக இருக்கிறதோ, அதைப் போலவே ஹேக்கர்களுக்கும் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும். எனவே 12345, Qwerty போன்ற எளிதில் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்டுகள் வேண்டவே வேண்டாம்.

உலகில் அதிகம் பேர் வைக்கும் மோசமான டாப் 10 பாஸ்வேர்டுகள் இவைதான்.
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. 12345
6. 123456789
7. football
8. 1234
9. 1234567
10. baseball


2. ஒரு பாஸ்வேர்டு.. ஒரு கணக்கு:

ஒரே ஒரு கடினமான பாஸ்வேர்டை மட்டும் வைத்துக் கொண்டு, அதையே அனைத்து கணக்குகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. உங்களின் பாதுகாப்பு குறைந்த ஏதாவது ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டால் கூட, மற்ற அனைத்துக்கும் ஆபத்து. முக்கியமான கணக்குகளுக்கு நீண்ட நாட்கள் ஒரே பாஸ்வேர்டு வைத்திருப்பதும் பாதுகாப்பானது கிடையாது.

3. பாஸ்வேர்டு மீட்டர் முக்கியம்:

ஒருசில சேவைகளில் நீங்கள் பாஸ்வேர்டு வைக்கும்போதே, அது எந்தளவுக்கு பாதுகாப்பானது என்பதைக் காட்ட அளவீடுகள் இருக்கும். உங்கள் பாஸ்வேர்டு எந்தளவுக்கு வலிமையாக இருக்கிறது என்பதனை அறிய அந்த அளவீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

4. பப்ளிக் வைஃபை வேண்டாம்:

உங்களது வங்கிக் கணக்குகள், ஷாப்பிங் கணக்குகள், மின்னஞ்சல் போன்ற முக்கியமான கணக்குகளின் பாஸ்வேர்டுகளை, பொது இடங்களில் இருக்கும் வைஃபைகளில் கொடுத்து லாக்-இன் செய்யாதீர்கள். எளிதாக திருடப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல அடுத்தவர்களின் மொபைல், கணினி போன்றவற்றில் லாக்-இன் செய்யும் போதும், பாஸ்வேர்டை சேமித்து வைக்க வேண்டாம்.

5. நீளம் மற்றும் தன்மை:

உங்களது பாஸ்வேர்டு பொதுவாக 10 கேரக்டர்களுக்கு மேல் செல்லும்போதுதான் வலிமையாக அமையும். எனவே சிறிய பாஸ்வேர்டுகளை தவிர்த்து விடுங்கள். அதேபோல மொபைல் எண்கள், பிறந்த தேதி போன்றவை உங்கள் பாஸ்வேர்டில் இல்லாமல் இருப்பது நலம். இவற்றை எளிதாக உங்களுக்கு தெரிந்தவர்கள் கண்டுபிடித்துவிட முடியும் என்பதால், இதனைத் தவிர்க்கலாம்.

6. எண் விளையாட்டு:

எண்கள், குறியீடுகள், எழுத்துகள் என அனைத்தையும் கலந்து உருவாக்கும் பாஸ்வேர்டுகளே, சிறந்ததாக இருக்க முடியும். இது இல்லாமல் எந்தவொரு பாஸ்வேர்டையும் அமைக்காதீர்கள். எனவே உங்கள் பாஸ்வேர்டின் இடையே குறியீடுகளை பயன்படுத்தலாம். ஏதேனும் ஒரு லாஜிக்குடன் (உங்கள் கல்லூரி எண், அலுவலக ரோல் நம்பர், திருமண நாள், பின்கோடு) என ஏதேனும் ஒரு லாஜிக்குடன் கூடிய, எண்களை இணைத்துக் கொள்ளலாம்.

குறியீடுகளை பயன்படுத்தும்போது, @, # போன்ற எளிதான குறியீடுகளை பயன்படுத்தாமல், மற்றவற்றை பயன்படுத்தலாம். எல்லா பாஸ்வேர்டுகளிலும் ஏதேனும் ஒரு குறியீட்டை, வேறுவேறு இடங்களில் ரிப்பீட் செய்வதன் மூலமாக, பாஸ்வேர்டு எளிதில் மறக்காது.


7. கடினமான லாஜிக்:


முதல் எழுத்து Capital letters, பாஸ்வேர்டு இறுதியில் பிறந்த தேதி, password என்பதை Pa$$w0rd, கீபோர்டில் அருகருகே இருக்கும் எழுத்துகள் என ஈஸியான லாஜிக்குகளும் உங்கள் பாஸ்வேர்டில் இருக்க வேண்டாம்.

உங்க ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது உஷார்:

உலகளவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, ஆனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
அதில் ஒன்று ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவது! சில விடயங்கள் மூலம் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யபடுவதை கண்டறியலாம்.
அப்டேட்
நமது ஸ்மார்ட்போனை யூஸ் செய்யாத போதும் சில சமயம் போன் சூடாகிவிடும். காரணம் நாம் அறியப்படாத ஆப் ஒன்று இயங்கிகொண்டிருக்கும், இதுபோன்ற பிரச்சனையால் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஸ்மார்ட்போன் புதிய அப்டேட் பெற்றிருப்பதை உறுதி செய்தால் இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
எதிரொலி
ஸ்மார்டபோன்களில் கால் அழைப்புகள் போது தேவையில்லாத சத்தம் அல்லது எதிரொலி போன்றவற்றினால் ஹேக் பிரச்சனைகள் வரும், மேலும், நாம் இருக்கும் இடத்தை கூட அடுத்தவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
சுவிட்ச் ஆப்
ஸ்மார்ட்போன் தானாகவே ஸ்விட்ச் ஆஃப் மற்றும் டயல் செய்தால் ஹேங் செய்யப்படுகிறது என அர்த்தமாகும்.

சாப்ட்வேர்
சில சமயங்களில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்ய முடியாது, அது போன்ற நேரத்தில் தேவையில்லாத ஆப் இயங்கி கொண்டிருக்கும். இதை தவிர்க்க சாப்ட்வேரினை உரிய நேரத்தில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
ப்ளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோரில் பெரும்பாலான செயலிகள் இலவசம் தான். அவற்றை பயன்படுத்தும் முன்பு நம்பத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தெரியாத எண்கள்
நமது ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய அழைப்புகளில் தெரியாத தொலைபேசி எண்கள் வந்தால் ஹேக் செய்வதற்க்கு வாய்ப்புள்ளது.

Beta Version என்றால் என்ன?

ஒரு மென் பொருளை உருவாக்கிய பிறகு அல்லது மேம்படுத்திய பிறகு அதனைச் சந்தைப்படுத்த முன்னர் மேலும் சில படிநிலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது. அவற்றுள் முதற்படியை அல்பா நிலை (Alfa stage) எனப்படும்.

அலபா நிலையில் அம்மென்பொருள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப் பட்டு பிழைகளிருப்பின் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பீட்டா பதிப்பு (Beta Version) வேர்சன் எனப்படுவது மென்பொருள் பரிசோதனையின் இரண்டாம் நிலையைக் குறிக்கிறது.

பீட்டா நிலையில் அந்த மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பாவனையாளர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்கப்பட்டு அவர்கள் மூலம் அம்மென்பொரு ளிலுள்ள நிரை குறைகள் கண்டறியப்படும்.

ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பை ஒரு முன்னோட்டமாகக் கருதலாம். ஒரு மென்பொருளின் பீட்டா பதிப்பு அந்த மென்பொருளுக்குரிய அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கும். எனினும் பரந்த அளவிளான விற்பனைக்குத் தயார் நிலையில் இருக்காது.

இந்த நிலையில் பீட்டா பதிப்பை பயன்படுத்துவோரிடமிருந்து மென்பொருள் பற்றிய கருத்துக்கள் சேகரிக்கப்படும். மென்பொருளை வெளியிட முன்னர் அவர்கள் எதனை விரும்புகிறார்கள், எதனை நீக்க வேண்டும் எதனை மாற்ற வேண்டும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.

பீட்டா பதிப்பிலும் மூடிய பீட்டா (closed beta) திறந்த பீட்டா (open beta) என இரு வகைகளும் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதை மூடிய பீட்ட பதிப்பு எனப்படுகிறது. திறந்த பீட்டா பதிப்பு பொது மக்கள் யாவரும் பயன்படுத்துமாறு வழங்கப்படுவதாகும். 


பீட்டா பதிப்பில் இறுதியாக வெளிவிட விருக்கும் பதிப்பில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தாலும் அதன் பயனர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியையே வழங்கும். சில நிறுவனங்கள் தமது மென்பொருளைப் பல வருடங்களுக்கு பீட்டா பதிப்பிலேயே விட்டு வைக்கும். அப்போது முழுமையான பதிப்பைப் போலவே அதனைப் பலரும் பயன்படுத்தலாம்

பீட்டா எனும் வார்த்தை கிரேக்க மொழி அரிச்சுவடியில் இரண்டாவது எழுத்தைக் குறிக்கிறது என்பது நீங்கள் அறிந்த விடயமே. பீட்டா பதிப்பு அல்லது பீட்டா சோதனை எனும் வார்த்தையை ஐபிஎம் நிறுவனமே முதலில் அறிமுகம் செய்தது

ஐபிஎம் நிறுவனம் தனது கணினி வன்பொருள் சாதனங்கள் முறையாக இயங்குகிறதா எனச் சோதிப்பதற்கே பீட்டா சோதனை எனும் வர்த்தையைப் பயன்படுத்தியது, எனினும் தற்போது இந்த வார்த்தையை மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களளும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன


அனேகமான மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் பொது மக்க்ள் பாவனைக்காக வெளியிட முன்னர் பீட்டா பதிப்பையே முதலில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன

IMEI நம்பரை வைத்து என்னவெல்லாம் பண்ணலாம் தெரியுமா?

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் போது எதிர்பாராமல் மொபைல் போன் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் அந்த எண்ணுக்கு போன் செய்வோம்.

சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட பின் மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிய முடியுமா? என்றால் கண்டிப்பாக முடியும்.

நம் அனைவரின் மொபைல் போனுக்கும் தனித்தனியாக IMEI நம்பர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் நம் மொபைல் இருக்கும் இடத்தை எளிதாக கண்டறியலாம்.
IMEI நம்பர்

IMEI நம்பர் என்பது நம் மொபைலில் உள்ள 15 இலக்க எண்ணாகும். மொபைல் போன் எந்த நாட்டை சேர்ந்தது, தற்போது எந்த நெட்வொர்க்கில் உள்ளது என்பதை அறியப்பயன்படுகிறது.

பேட்டரியின் பின் புறத்தில் IMEI நம்பர் ஆனது குறிப்பிடப்பட்டு இருக்கும். இதனை மொபைலில் *#06# என்னும் எண்ணுக்கு அழைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

2003-ம் ஆண்டில் முதன் முதலாக அவுஸ்திரேலியாவில் தான் இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டது. போலியாக வரும் மொபைல் போன்களை அடையாளம் காணவே இது பயன்படுத்தப்பட்டது.

IMEI நம்பர் வைத்து மொபைல் இருக்கும் இடத்தை அறியலாம். இது மட்டுமல்லாமல் இந்த எண்ணை வைத்து மொபைல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் எளிது

மொபைலில் வேறு சிம் கார்டு பயன்படுத்தப்பட்டாலும் மொபைல் இருக்கும் இடத்தை ட்ராக் செய்வது எளிது.

சாதாரண நபர்களால் மொபைலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ அல்லது மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளவோ இயலாது. ஆனால் மொபைல் நிறுவனங்களுக்கு இது சாத்தியமே.

எனினும் மொபைல் நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக இந்த விவரங்களை யாருக்கும் தருவதில்லை.

சில ஹேக்கர்கள் இரகசியமாக இந்த வேலை செய்து மற்றவர்களின் விவரங்களை எளிதாக திருடிவிடுகின்றனர்.

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை ரூட் (Root) செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான விடையைப் பார்க்கலாம்.

உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் உங்களுக்கு அவசியமில்லாத அப்ளிகேசன்கள் பல இருக்கும். அதனால், நீங்கள் விரும்பும் அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்ய போதிய மெமரி இல்லாத நிலை ஏற்படக்கூடும்.

டைட்டானியம் பேக்-அப் (Titanium Backup) அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாதத இயலாது. அதனை பயன்படுத்த ரோம் மேனேஜர் (ROM Manager) மூலம் விரும்பும்படி பிளாஷ் ரோம் மாற்றும் வசதி இருக்காது.

ஆனால் மொபைலை ரூட் செய்வதன் மூலம் இது போன்ற வசதிகளை பெற முடியும். உங்கள் மொபைல் போனை முற்றிலும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

ரூட் செய்வதால் என்ன ஆகும் என்றால், உங்களுக்கு சூப்பர் யூசர் பவர் (Super User Power) கிடைக்கும். அதாவது, மொபைலின் தயாரிப்பாளர் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் நீங்களும் செய்ய முடியும்.

ரூட் செய்வதற்கான பிரத்யேக அப்களிகேஷன் மூலமாக இதனைச் செய்யலாம். அல்லது கணிணி உதவியுடன்கூடச் செய்ய முடியும். ஆனால், இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், ரூட் செய்யப்பட்ட மொபைல் வாரண்ட்டியை இழந்துவிடும். பெரும்பாலான நிறுவனங்கள் ரூட் செய்த மொபைலின் வாரண்ட்டியை ரத்துசெய்வதில் உறுதியாக இருக்கின்றன. வாரண்ட்டி அறிக்கையிலும் இதனை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இருப்பினும், ரூட் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பல என்பதால் வாரண்டியை தியாகம் செய்து பலர் ரூட் செய்கிறார்கள். ரூட் செய்த மொபைலைகூட மீண்டும் பழையபடி ஆக்க அன்-ரூட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது எப்படி?

ஸ்மார்ட்போனில் காண்டாக்ட்களை பதிவு செய்ய பயனுள்ள சேவையாக கூகுள் காண்டாக்ட் இருக்கிறது. நமது காண்டாக்ட்களை பதிவு செய்வதில் முக்கிய அங்கம் வகிக்கும் கூகுள் காண்டாக்ட்டில் அவ்வப்போது தேவையற்றதாக இருக்கும் காண்டாக்ட்களை நீக்குவோம். எனினும் தவறுதலாக அவசியமான சல காண்டாக்ட்களை நீக்கியிருப்போம். 

இதுபோன்ற நேரங்களில் அழிந்து போன கூகுள் காண்டாக்ட்களை மீட்பது சுலபமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வகையில் கூகுளில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.  

வழிமுறை 1: முதலில் புதிய கூகுள் காண்டாக்ட் வலைதளத்தை பிரவுசரில் திறந்து நீங்கள் காண்டாக்ட்களை பதிவு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி சைன்-இன் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

வழிமுறை 2: வலைதளத்தை திறந்ததும், மெனு ஆப்ஷனில் இருக்கும் மோர் (More) பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து ரீஸ்டோர் காண்டாக்ட் (Restore Contacts) எனும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இனி திரையில் தெரியும் டைம் ஃபிரேமில் நீங்கள் அழித்த காண்டாக்ட்களில் மீண்டும் உங்களுக்கு தேவையானவற்றை தேர்வு செய்து ரீஸ்டோர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேம்டும். 

இவ்வாறு செய்ததும், நீங்கள் ஏற்கனவே அழித்த காண்டாக்ட்கள் மீட்கப்பட்டு விடும். இவ்வாறு நீங்கள் அழித்த காண்டாக்ட்களை  30 நாட்கள் வரை மீட்க முடியும். கூகுள் காண்டாக்டில் அழிந்து போன காண்டாக்ட்களை 30 நாட்களுக்கு பின் மீட்க முடியாது.

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இண்டர்நெட் பாதுகாப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்தும் அனைவரும் சைபர் சார்ந்த அச்சுறுத்தல்களில் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாகியுள்ளது.
 
இண்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படலாம் என்ற வகையில், உங்களது நெட்வொர்க்களை ஹேக்கர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பெயரை மாற்ற வேண்டும்:

முதலில் உங்களது வைபை பெயரை மாற்ற வேண்டும், பெயரை மாற்றுவது ஹேக்கர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டரை அறிந்து கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டர் சார்ந்த தகவல்களை ஹேக்கர்கள் அறிந்து கொண்டால், அவர்களால் மிக எளிமையாக உங்களது நெட்வொர்க்கில் நுழைய முடியும்.

நெட்வொர்க் என்க்ரிப்ஷன்:

வயர்லெஸ் நெட்வொர்க்களில் பல்வேறு என்க்ரிப்ஷன் மொழிகள் இடம்பெற்றுள்ளன, WEP, WPA அல்லது WPA2. இதில் WEP 1990களில் உருவாக்கப்பட்டது. இதனால் இதனை மிக எளிமையாக ஹேக் செய்ய முடியும். என்க்ரிப்ட் செய்ய தலைசிறந்த மொழி WPA AES தான். அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்களும் சப்போர்ட் செய்யும் மொழியாகவும் WPA AES இருக்கிறது.

ரவுட்டர் வைக்கும் இடம்:

வீட்டில் ரவுட்டர் வைக்கும் இடம் முக்கிய அங்கம் வகிக்கிறது. எப்போதும் வைபை ரவுட்டர்களை வீட்டின் நடு மையத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சிக்னல் சீராகவும், அனைத்து அறைகளுக்கும் பரவும். இத்துடன் சிக்னல் வெளியேறும் அளவும் குறைவாக இருக்கும். 

ரிமோட் அக்சஸ்:

பெரும்பாலான ரவுட்டர்கள் தங்களது இன்டர்ஃபேசினை இணைக்கப்பட்ட சாதனத்தில் இருந்து இயக்க வழி செய்கிறது என்றாலும் சில ரவுட்டர்கள் ரிமோட் சிஸ்டம்களில் இருந்தும் இயக்க வழி செய்யும். இதை பயன்படுத்தி ஹேக்கர்களால் மிக எளிமையாக உங்களது நெட்வொர்க்கில் நுழைய முடியும். 

ரிமோட் அக்செஸ் ஆப்ஷனை செயலிழக்க செய்தால் மற்றவர்கள் உங்களது நெட்வொர்க்கில் நுழைவதை தடுக்க முடியும். இதை செய்ய வெப் இன்டர்ஃபேஸ் சென்று ரிமோட் அக்செஸ் அல்லது ரிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் ஆப்ஷன் சென்று மாற்ற முடியும்.